துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான சீனிவாசனின் மகன் என்கிற அடைமொழியுடன் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வினீத் சீனிவாசன். இன்று வினீத் சீனிவாசனின் தந்தை என அழைக்கப்படும் அளவுக்கு தனது தந்தையை விட மோஸ்ட் வான்ட்டேட் நபராக இருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' தான், நிவின் பாலி அறிமுகமான முதல் படம். இரண்டாவது படமான 'தட்டத்தின் மறயத்து' படத்திலும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது. படமும் ஹிட்.. இரண்டு தேசிய விருதுகள் கூட கிடைத்தன.
கடந்த மார்ச்சில் மலையாளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய 'ஒரு வடக்கன் செல்பி' படத்திற்கு கதையையும் எழுதிகொடுத்து, நிவின் பாலிக்காக கூடவே முக்கியமான கேரக்டரிலும் நடித்தார் வினீத் சீனிவாசன். இந்தப்படம் சென்னையில் ஐம்பது நாட்களை தாண்டி இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் இப்போது பல இளைஞர்கள் தங்களது கதைகளை எழுதி வினீத் சீனிவாசனுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஆனால் வினீத் சீனிவாசனோ “தயவுசெய்து எனக்கு யாரும் பேஸ்புக், வாட்ஸ் அப், ஈமெயில் மூலமாக உங்களது கதைகளை என்னை கேட்காமல் அனுப்பி வைக்காதீர்கள்.. உங்களது கதைகளை தயவுசெய்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். நான் என் கதைகளை மக்கள், சமூகம், படிக்கும் புத்தகங்கள், பயணம் மற்றும் எனது சொந்த அனுபவங்களில் நான் பார்க்கும் விஷயங்களில் இருந்துதான் தேர்ந்தெடுக்கிறேன். ஆகவே உங்களது கதைகளை எனக்கு அனுப்ப வேண்டாம். அதை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குங்கள்” என கூறியுள்ளார்.