டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விநியோகஸ்தர் சங்கத்தலைவராக இருப்பவர் கலைப்புலி ஜி.சேகரன். ஏற்கனவே பல படங்களை தயாரித்துள்ள இவர், தற்போது ஒரு பூ ஒரு துப்பாக்கி என்றொரு படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆனால் அப்படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் பயந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தவர்கள் நேர்த்தியாக தொழில் செய்து வந்தனர். ஆனால் இப்போது புதியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்து சினிமாவை கெடுத்து விட்டனர்.
அழகான மீடியாவான சினிமாவில் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற நிலை வந்தபோது, ரசிகர்களை கருத்தில் கொள்ளாமல் அவரவர் விருப்பம் போல் படமெடுக்கின்றனர். இதனால் மக்கள் தியேட்டருக்கு வருவதேயில்லை. அந்த அளவுக்கு புதிதாக வந்தவர்கள் சினிமாவை கண்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சில நல்ல படங்கள்கூட ஓடுவதில்லை. சினிமாவில் நீண்ட காலம் இருந்து வரும் நான், ஒரு பொறுப்பில் இருக்கிறேன். என்றாலும், தற்போது நான் தயாரித்த படத்தை வெளியிடகூட எனக்கு பயமாக உள்ளது என்று கூறிய ஜி.சேகரன், சினிமாவில் தொழில் சுதந்திரம் இருந்தாலும், நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்கிறார்.