ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரீ-என்ட்ரியில் மாஞ்சா வேலு, ராவணன், அநேகன் என சில படங்களில் நடித்த நவரச நாயகன் கார்த்திக், தற்போது புதிதாக இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், கார்த்திக் புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கோலிவுட்டில் நிலவும் கருத்தினை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது புதிய டைரக்டர்கள் கதை சொல்ல வேண்டும் என்று தொடர்பு கொண்டால் அவர்களை அலைய விடாமல் உடனே அழைத்து கதை கேட்டு வருகிறார்.
ஆனால், அப்படி அவரிடம் கதை சொல்ல செல்பவர்கள், கதையையும், அவரது கேரக்டரையும் சொல்லி விட்டு, இந்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம் கார்த்திக். கேட்டால், எனக்கென்று ஒரு பாணி உள்ளது. அதை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்கிறாராம்.
மணிரத்னம் படங்களைப்பொறுத்தவரை அனைவருமே அவர் சொன்னபடி பேசி நடிப்பார்கள். ஆனால் நான் மட்டும்தான் எனது பாணியலேயே நடித்திருப்பேன். காரணம், எந்த சூழ்நிலையிலும் நான் எனது ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பியதில்லை. அதனால் மணிரத்னம்கூட எனக்கான டயலாக்கை என் விருப்பப்படியே பேசி நடிக்க அனுமதித்தார் என்று தனது நிலையை விளக்குகிறாராம் கார்த்திக்.