அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆவது நினைவிருக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆடியோ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோஹர், எஸ் எஸ் ராஜமௌலியின் படத்தில் நடித்த ஹீரோக்கள் மற்றும் பல துறையை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்? எதற்கு என்ன காரணம்?இந்த படத்தில் நடிக்காத பிரபல நடிகரான நானி மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதாவது அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த படத்தில் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்குகிறார். பிரபல இசை அமைப்பாளரான கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.