ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர்ஸ்டார் ஹீரோக்கள் எப்போதுமே தங்களுக்கான சம்பளத்தை பிக்ஸ் பண்ணி வைத்திருக்க மாட்டார்கள். படத்திற்கு படம் பட்ஜெட் ஏறும்போதும், முந்தைய பட கலெக்சனை பொறுத்தும் சம்பளத்தை மாற்றுவார்கள். ஆனால் பல வருடங்களாக கிட்டத்தட்ட ஒரே அளவு சம்பளத்தை வாங்கி வந்த மம்முட்டி, சமீபத்தில் வெளியாகி தற்போது 5௦வது நாளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திவிட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுநாள் வரை என்ன சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்கள் என நினைக்கிறீர்கள்.. ஜஸ்ட் மூணரை கோடி ரூபாய் மட்டும் தான்.. உண்மை தான். இதில் என்ன சோகம் என்றால் முப்பது வருடங்களாக கேரளாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மம்முட்டியை, விட மூன்று வருடத்திற்கு முன் தமிழில் நடிகரான சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் அவரைவிட இரண்டு கோடி அதிகம்..
ஆனால் மலையாள சினிமாவின் வியாபார எல்லை குறுகியது என்பதால் மம்முட்டிக்கு வழங்கப்படும் சம்பளமே அங்கு அதிகபட்சம் என்கிறார்கள்.. என்ன.. இதிலிருந்து இன்னும் 5௦ லட்சம் உயர்த்தி, நாலு கோடி கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது அவ்வளவுதான்.. கேரளா சூப்பர்ஸ்டார்கள் இருவரும் வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடிப்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா..?