‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார் என ரஜினியைப் பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்க, உண்மையில் ஒரே நேரத்தில் பல ப்ராஜன்ட்களில் பிஸியாக இருப்பது கமல்தான். உத்தம வில்லன்' ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து 'பாபநாசம்' படத்தை வெளியிடும் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார் கமல். அதோடு, தனது அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தைத்தொடங்கிவிட்டார். கமலின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அவரின் அசோசியேட் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் த்ரிஷா கதாநாயகி என்றாலும், மனீஷா கொய்ராலா, அனைகா சோதி, உமா ரியாஸ்கான் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'தூங்காவனம்' படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் திட்டத்தில் தெலுங்கு வெர்ஷனுக்கு 'சீக்கட்டி ராஜ்யம்' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் போஸ்டர் அறிமுக விழாவையும் ஆந்திராவிலேயே நடத்தினார். அந்த விழாவில் படத்தின் நாயகன் கமலுடன் நாயகி த்ரிஷாவும் கலந்து கொண்டதோடு, பிரகாஷ் ராஜும், கிஷோரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் கலந்து கெண்டதை வைத்து பிரகாஷ் ராஜும், கிஷோரும்தான் 'தூங்காவனம்' படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற தகவல் அடிபடுகிறது.