வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜாம்பவான் இயக்குநரான மணிரத்னம் கிங் நாகார்ஜூன், பிரின்ஸ் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அழகு நடிகையான ஸ்ருதி ஹாசன் ஆகியோரை வைத்து தமிழ்-தெலுங்கு மொழி படத்தை எடுக்க இருக்கிறாராம். இந்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பு நீண்ட நாளுக்கு முன்பே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் தனது தனிப்பட்ட வேலைகளுக்காகவும். இயக்குனர் மணிரத்னம் ஓகே கண்மணி என்ற படத்திற்காக பிஸியாக இருந்தார். இந்நிலையில் இந்த புதிய படம் பற்றி ஐஸ்வர்யா ராய் கூறும்போது, நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் (இட்டரு) படம் மூலம் தான். நான் தற்போது ஒரு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்தையும் மணி சார் இயக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அது வெகு விரைவில் நடக்கும் என்றார். இந்த தமிழ்-தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாகயும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.