இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது நடித்து வரும் ப்ரூஸ்லீ என்ற புதிய படத்தின் விநியோக உரிமை மிகப்பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் ரூ 6 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. உள்ளூரில் ராயலசீமா பகுதியின் விநியோக உரிமை சுமார் ரூ 8 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. இது போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பது என்பது ஒரு பிரபல ஹீரோவுக்கு ஏற்புடையதாகவே கருதப்படுகின்றது. மேற்கூறிய தகவல்கள் உண்மை எனில் ராம் சரண் ஒரு ரெகார்ட் ஏற்படுத்தி இருக்கிறார் என்று தான் அர்த்தமாகின்றது. இந்த படத்தில் பிரபல முன்னாள் நடிகையான நதியா ஒரு பவர்புல் வேடத்தில் நடிக்கிறாராம். டி.வி.வி. எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தானைய்யா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீனு வைட்ல இயக்குகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், தங்கையாக கிருதி கந்தர்பா நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகையையொட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.