ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம், சமந்தா நடிப்பில், விஜய் மில்டன் இயக்கி வரும் படம் ''10 எண்றதுக்குள்ள''. பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. கிளைமாக்ஸ் மட்டுமே பாக்கி உள்ளது.
பயணத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ரெயிலில் நடக்கிறது. வழக்கமான ரெயில் சண்டை காட்சியாக இல்லாமல் புதுமையான சண்டைக் காட்சியை படமாக்க இருக்கிறார் விஜய் மில்டன். அதாவது அருகருகே செல்லும் இரண்டு ரெயிலில் கிளைமாக்ஸ் எடுக்கப்படுகிறது. ஒரு ரெயிலில் தப்பி ஓடும் வில்லனை, பிடிக்க இன்னொரு ரெயிலில் விக்ரம் துரத்திச் சென்று சண்டையிடுவதாக கிளைமாக்ஸ் காட்சி வடிவமைக்கப்ட்டுள்ளது.
ஹாலிவுட் படங்களில்தான் இதுபோன்ற சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இரண்டு டிராக்கிலும் ரெயில் ஓடும் பகுதி, இரண்டு ரெயில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இரண்டு ரயில்களுக்கும் ஒரு நாள் வாடகை மட்டும் 25 லட்சம் ஆகுமாம்.