தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோச்சடையான் படத்திற்கு பின்னர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டு வேடத்தில் நடித்து வௌியான படம் லிங்கா. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் இப்படத்தை வாங்கி வௌியிட்ட விநியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை முன் வைத்தனர். இறுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு, சில கோடிகள் நஷ்ட ஈட்டு தொகையாக வழங்கப்பட்டது. இதை விநியோகஸ்தர்கள் பங்கீட்டு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் போர்கொடி
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சில விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சிலர், தங்களுக்கு சொன்னபடி நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்படவில்லை என்று மீண்டும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஏரியா வினியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் சார்பில் வௌியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...
ரூ.12.50 கோடி தர உடன்பாடு
ரஜினி சார்பில் பேசிய திருப்பூர் சுப்ரமணியம், ரஜினி அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்க ஆளாகியிருக்கிறார், தற்போது ரூ.12.50 கோடி வாங்கி கொள்ளுங்கள், மீதியுள்ள நஷ்டஈட்டு தொகையை வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் படத்திற்கு ரஜினி அவர்கள் கால்ஷீட் கொடுப்பார். அப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து மீதி நஷ்டத்தை ஈடுகட்டி கொள்ளுங்கள் என்றார். நாங்களும் நம்பி ரூ.12.50 கோடி பணத்தை பெற்று கொள்ள சம்மதித்தோம். லிங்கா பிரச்னை முடிவுக்கு வந்ததாக நாங்களும் பத்திரிகையாளர்கள் முன்பு அறிவித்தோம்.
நம்ப வைத்து ஏமாற்றப்பட்டோம்
இதுவரை ரூ.5.89 கோடி தான் நஷ்டஈட்டு தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.6.61 கோடி இன்று வரை கொடுக்கப்படவில்லை. பணத்தை தாணுவிடம் கேட்டால் திருப்பூர் சுப்ரமணியத்திடம் இருக்கிறது என்கிறார். சுப்ரமணியத்திடம் கேட்டால் மதுரை அன்புவிடம் இருக்கிறது என்றார். ஒரு கட்டத்தில் பணமெல்லாம் இல்லை என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். இந்த விஷயத்தில் நாங்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டுள்ளோம். ரஜினியின் தூதராக செயல்பட்ட முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். திருப்பூர் சுப்ரமணியம், ரஜினியின் தூதர் தானா.?
இனி பொறுமை காக்க முடியாது
இனியும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட ரூ.12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட லிங்கா பட விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களிடம் இடைதரகர் இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். லிங்கா பட வௌியீட்டின் போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவிஸ் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.12.50 கோடிக்கு ஒப்புக் கொண்டபோது, விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவிஸ், தியேட்டர்காரர்கள் எந்த பிரச்னையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ்க்கு ரஜினி கால்ஷீட் தர வேண்டும்
எம்.ஜி. அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தர வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே எம்.ஜி அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
அடுத்தவாரம் அடுத்தகட்ட நடவடிக்கை
அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க லிங்கா படத்தை எம்.ஜி அடிப்படையில் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்தவாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி அப்செட்
லிங்கா பிரச்னை ஒருவழியாக தீர்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டு, தனது அடுத்தபடத்தில் இறங்க ரஜினி முடிவெடுத்திருந்த நிலையில், விநியோகஸ்தர்கள் மீண்டும் பிரச்னையை கிளப்பி இருப்பது ரஜினியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பணம் கொடுத்தும் அது சரியாக விநியோகஸ்தர்கள் போய் சேராததால் எங்கு தவறு நடந்தது என்று தனது சகாக்களிடம் விவரம் கேட்டு வருகிறார் ரஜினி.