'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் முத்துக்குமார் வாண்டட். சரண், நிஷிரா ஹீரோ, ஹீராயினாக நடித்துள்ளனர், சுந்தரா இசை அமைத்துள்ளார், எம்.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார். முனியாண்டி கேசவன், வேல் சரவணன் தயாரித்துள்ளனர். அனைவருமே மலேசியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாத்திமாபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட தமிழ்நாட்டு கலைஞர்களும் பணியாற்றி உள்ளனர்.
"சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் வளர்ந்து ஆளான ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்றையதினம் ஒரு பரிசுப்பெட்டியை அனுப்பிய முத்துக்குமார் அதனுள் விலை உயர்ந்த பரிசு பொருள் இருப்பதாகவும், அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார். அப்படி ஏர்பபோர்ட் வரத்தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனந்தி ஏர்போர்ட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி, அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா ? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக்கொண்டாளா என்பதையும் நகைக்சுவை கலந்து சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் பத்மநாபன்.