விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இயக்குனர் கஸ்தூரி ராஜா, ''காசு பணம் துட்டு'' என்கிற படத்தை கடந்த 2 வருடங்களாக எடுத்து வருகிறார். இது குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்களை சமூக விரோதிகள் எப்படி குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் எப்படி போதைக்கு அடிமையாகிறார்கள், அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதைப் பற்றிய படம். இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் குடிசைப்பகுதி மக்களையும், அண்டர்கிரவுண்ட் தாதாக்களையும் சந்தித்து பேசி திரைக்கதை அமைத்து உருவாக்கியதாக கஸ்தூரிராஜா பல தருணங்களில் கூயிருக்கிறார்.
5 மாதங்களுக்கு முன்பு படத்தை தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காட்டினார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் "படத்தின் நோக்கம் சரிதான் அதை எடுத்த விதம்தான் பயங்கரம்" என்று சொல்லி ஏ சான்றிதழ் கொடுத்தனர். அதை எதிர்த்து கஸ்தூரி ராஜா மறு ஆய்வு கமிட்டிக்கு மனுச் செய்தார். மறு ஆய்வு கமிட்டி படத்தை பார்த்துவிட்டு "இது தடைசெய்யப்பட வேண்டிய படம், என்றாலும் நல்ல கருத்தை சொல்வதால் ஏ சான்றிதழ்தான்" என்று உறுதியாக கூறிவிட்டார்கள்.
இதனால் படத்தில் போதை மருந்து அருந்தும் காட்சிகள், வன்முறை காட்சிகள் சிலவற்றை நீக்கிவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்துவிட்டு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்