டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி நோயினால் வெளியேறியவர் சமந்தா. அதனால் நல்ல வாய்ப்புகளை இழந்த அவரால் இனிமேல் தமிழில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான் அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய்யுடன் கமிட்டாகி முன்வரிசை நடிகைகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சூர்யாவுடன் 24 படத்தில் நடித்து வரும் சமந்தா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2விலும் நடித்து வருகிறார். இதற்கடுத்து மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னையிலும் தனுசுடன் நடிக்கும் அவர், கத்திக்கு பிறகு மறுபடியும் அட்லி இயக்கும் படம் மூலம் விஜய்யுடன் இணைகிறார்.
ஆக, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் மெகா ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகியாகி விட்டார் சமந்தா.