ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் நடித்த ''விருமாண்டி'' படத்தில் அவருடன் நடித்தவர் அபிராமி. அதற்கு முன்பு வரை கோடு போட்டு நடித்து வந்த அவர், அந்த படத்தில் கமலுடன் தாண்ணீருக்குள் கட்டிக்கலந்தாடி ரொமான்ஸ் செய்தார். ஆனால் அதன்பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி, பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
ஆனால், அப்படி சென்றவரை பல வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது உத்தமவில்லன் படத்தில் டப்பிங் பேசுவதற்காக கமலே கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அப்படி வந்த அபிராமியை, ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடிக்க வைத்தனர். அப்படத்தில் கவனிக்கப்படும் கேரக்டரில் நடித்த அபிராமி இப்போது மேலும் சில டைரக்டர்களின் கவனத்துக்கும் வந்து விட்டார்.
இந்த நிலையில், தற்போது கமல் தூங்காவனம் படத்தில் நடிக்கும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் தனக்கு ஒரு நல்ல கேரக்டர் தருமாறு கமலிடம் கேட்டிருக்கிறாராம் அபிராமி. ஆனால் அதற்கு இன்னும் கமல் பதில் கொடுக்கவில்லை என்றபோதும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் அபிராமி, அப்படி கமல் படத்தில் சான்ஸ் கிடைத்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி விடலாம் என்றும் நினைக்கிறாராம்.