தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரும்பாலும் காமெடி காட்சிகள் என்றால் வசனங்கள், பாடிலாங்குவேஜ் மூலம்தான் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள் காமெடியன்கள். ஆனால் அது நான் கடவுள் ராஜேந்திரன் விசயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது அவர் மற்றவர்களைப் போன்று காமெடி செய்த படங்களை விட அருவா கம்பு, துப்பாக்கியை தூக்கி கொண்டு நடித்த படங்களில்தான் அவரது காமெடிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனால் இவரே மாற நினைத்தாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. அவரை ரவுடியாக, கூலிப்படையாக, கறிக்கடைக்காரனாக என அவரது கையில் ஏதாவது ஆயுதங்களை கொடுத்துதான் நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அப்படி சொல்லும் டைரக்டர்களிடம், காமெடி செய்கிறோம் எதற்காக அருவா கம்புடன் திரிய வேண்டும் என்று இவர் கேள்வி கேட்டால், அப்படி எதையாவது தூக்கினால்தான் உங்க காமெடி ஒர்க்அவுட் ஆவுது என்கிறார்களாம்.
ஆக, நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். எதை ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்ட நான் கடவுள் ராஜேந்திரன், டைரக்டர்கள், ரசிகர்கள் விரும்பும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அதேசமயம், அவர் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும் நிஜத்தில் இளகிய மனம் கொண்டவராம். யாராவது கண்கலங்குவதை பார்த்தால் தானும் கரைந்து விடுவாராம்.