பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'லிங்கா' தயாரிப்பாளர்கள், மற்றும் வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடையேயாயன பிரச்சனை மீண்டும் ஆரம்பமாகும் நிலை எழுந்துள்ளது. இன்று மதியம் இப்படத்தை வாங்கி வெளியிட்ட செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஏரியா வினியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 'லிங்கா' வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், சொன்னபடி அந்தப் பணத்தை இதுவரை தரவில்லை என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகளின்படி சுமூகத் தீர்வு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. நஷ்ட ஈட்டுத் தொகையை பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதன் பின் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை தராமல் அப்படியே நிறுத்திவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் விரைவில் இரண்டு புதுப் படங்களில் நடிக்க உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க 'லிங்கா' வினியோகஸ்தர்கள் முடிவு செய்திருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.