இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ''சவாலே சமாளி'', ''கலக்குற மாப்ள'' படங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், சாகர சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பழம்பெரும் தெலுங்கு நடிகை பிந்து மாதவி, உடல் நலக்குறைவால் கடந்த வௌ்ளியன்று காலமானார். இவர் இறந்தது தவறாக தற்போது இளம் நடிகையாக இருக்கும் பிந்து மாதவி இறந்து விட்டதாக செய்தி பரவிட்டது. இந்த செய்திப்பற்றி அறிந்த பிந்து மாதவி கடும் அதிர்ச்சிக்கு உள்ளானதோடு உடனடியாக தான் நலமாக இருப்பதையும் தௌிவுப்படுத்தியுள்ளார்.
இதுப்பற்றி பிந்து மாதவி தனது வலைபக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் நலமாக இருக்கிறேன். என் பெயரில் இருந்த மூத்த நடிகை பிந்து மாதவி இறந்துவிட்டார். அவர் இறந்ததை நான் இறந்ததாக தவறாக செய்தி பரப்பி விட்டுவிட்டனர். நான் நலமாக உள்ளேன். இறந்த நடிகைக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.