'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு வில்லன், சினிமாவில் இருப்பதை விட நிஜத்தில்தான் கொடூரமானவனாக இருக்கிறான். அது வைரல் வீடியோக்கள், செல்பிகள், வாட்ஸ்அப்கள். நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளிவருவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இப்போதுள்ள டெக்னாலஜிகள் வளர்வதற்கு முன்பே அவை வந்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இது சர்வசாதாரணம். ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு வந்து இப்போது கோலிவுட்டிற்கும் வந்து விட்டது.
நடிகை த்ரிஷாவின் வைரல் வீடியோக்கள் ஒரு காலத்தில் பரபரத்தது. சிம்பு- நயன்தாரா, சிம்பு-ஹன்சிகா, ஆண்ட்ரியா-அனிருத்தின் அந்தரங்க படங்கள் வெளியானது. இப்படி அவ்வப்போது நடந்த விஷயம் இப்போது அடிக்கடி நடக்க ஆரம்பித்திருக்கிறது.
நடிகை வசுந்தரா, ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளத்தில் வெளிவந்து சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹன்சிகாவின் குளியல் வீடியோ வெளிவந்தது. லட்சுமிமேனன், சுப்பிரமணியபுரம் சுவாதி, ராய் லட்சுமி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தது. இவை எல்லாவற்றையுமே சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து விட்டார்கள்.
சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு ஹிந்திப் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை ராதிகா ஆப்தே மறுக்கவோ, மறைக்கவோ இல்லை. "
இந்த மாதிரியான படங்கள், வீடியோக்கள் 6 விதமாக பரவுகிறது. உலகமெங்கும் போர்னோகிராபிக் படங்கள் தயாராகிறது. இந்த மாதிரி படங்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் நமக்கு அறிமுகமான நடிகைகளின் சாயலில் இருந்து விடுவது உண்டு. அதை அப்படியே இந்த நடிகைதான் அவர் என்று வெளியிட்டு விடுவார்கள். அடுத்தது மார்பிங். ஆபாச படங்களின் மீது நடிகைளின் முத்தை ஒட்டி அச்சு அசலாக அந்த நடிகையின் படம்போல வெளியிடுவது.
அடுத்தப்படியாக படப்பிடிப்பில் அல்லது பொது இடங்களில் நடிகைகளின் கவனக்குறைவால் அவர்கள் ஆடை விலகுவதும், அவிழ்வதும், உள்ளாடை தெரிய அமர்ந்திருப்பதுமான படங்கள். ஐந்தாவது வகை லேட்டஸ்ட்டானது. இப்போது சட்டை பட்டன் அளவிற்கு கேமரா வந்து விட்டது. அதனால் நடிகைளின் மேக்அப் அறை. உடை மாற்றும் அறை, தங்கும் ஒட்டல் அறையில் கேமராவை மறைத்து வைத்து அதில் பதிவாகும் காட்சிகளை வெளியிடுவது. இதுதான் இருப்பதிலேயே ஆபத்தானது.
ஆறாவது வகை சிலர் ஜாலிக்காக எடுக்கும் செல்பிக்கள், அல்லது தனக்கு நெருக்கமானவர்களுடன் எடுக்கும் படங்கள். இவைகளை அவர்கள் தங்கள் செல்போனில் டெலிட் செய்து விட்டால்கூட அதை மீட்டெடுக்கும் டெக்னாலஜி வந்து விட்டது. சம்பந்தப்பட்ட செல்போன் விற்கப்படும்போதோ, அல்லது சர்வீஸ் செய்ய கடைக்கு செல்லும்போதோ அங்கிருந்து அப்படியே பரவி விடுகிறது. இதுபோன்ற காரியங்களை செய்வது ஒரு வித நோய். டாய்லெட் சுவரில் வாசகம் எழுதுகிற மனநிலை கொண்டவர்களால்தான் இந்த காரியங்களை செய்ய முடிகிறது.
தடுக்க செய்ய வேண்டியது என்ன?
இதுதான் இப்போது நடிகைளின் மிகப்பெரிய தலைவலியாகவும், சவாலாகவும் இருக்கிறது. இதை தடுக்க செய்ய வேண்டியது என்ன? முடிந்தவரையில் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது. அந்தரங்கமாக செய்ய வேண்டிய விஷயங்களை பொது இடத்தில் தவிர்ப்பது. விளையாட்டுக்காகவோ, ஜாலிக்காகவோ அந்தரங்கங்களை செல்பியாக படம் பிடிப்பதை தவிர்ப்பது இவைகள் முக்கியமானவை.
நம்பிக்கைக்குரிய ஓட்டலாக இருந்தாலும் அந்த ஓட்டல் அறையில் கேமரா இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். கேமரா இல்லை என்கிற உறுதியை ஓட்டல் நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமாக பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நவீன உலகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் தனிமை, ரகசியம் என்பதே இல்லை என்கிற நிலை வரலாம். எனவே எப்போதும் நம்மை ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம்.
இதுபோன்ற வைரல் வீடியோக்கள் சினிமா ஹீரோயின்களுக்கு மட்டுமல்ல, குடும்ப பெண்கள் பற்றியும் வரத்தான் செய்கிறது. அவர்கள் செலிபிரிட்டியாக இல்லாததால் பரப்பப்படுவதில்லை. இதை முழுமையாக தடுக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருந்தால்தான் இந்த வீடியோ வில்லன்களிடமிருந்து தப்பிக்க முடியும்.