ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரகாஷ்ராஜ். முன்னதாக, தனது தாய்மொழியான கன்னடத்தில் அரை டஜன் படங்களில் நடித்திருந்தார். ஆனபோதும், பின்னர் அவரது கவனம் தமிழ், தெலுங்கில் அதிகமானது. ஒருகட்டத்தில் தமிழில் அதிகமான படங்களில் நடித்து வந்தவர், டூயட் மூவீஸ் என்ற நிறுனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்தார். அதோடு படங்களை இயக்கியும் நடித்தார். ஆனால் அப்படி அவர் இயக்கி நடித்த படங்களான டோனி, உன் சமையல் அறையில் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால் இயக்கத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்திய பிரகாஷ்ராஜ், ஹிந்தியிலும் மெகா வில்லனாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் இப்போது அங்கும் படவாய்ப்புகள் அவருக்கு குறைந்து விட்டதாம்.
அதோடு தமிழில் ஓ காதல் கண்மணிக்கு பிறகு கமலின் தூங்காவனம் படத்தில் மட்டுமே நடிப்பவர், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். இந்த நேரத்தில் இதுவரை குறைவான சம்பளம் தருவார்கள் என்று சொல்லிக்கொண்டு தனது தாய்மொழியான கன்னட படங்களை தவிர்த்து வந்த பிரகாஷ்ராஜ். இப்போது அங்குள்ள டைரக்டர்களையும் அரவணைக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், பிரியங்கா திரிவேதி நடிக்கும் பிரியங்கா என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.