சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
இசை படத்தை இயக்கி நடித்து இசையமைத்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்தபடியாக தமிழில் படம் தொடங்குவார் என்று பார்த்தால் அவரிடம் அப்படி எந்த எண்ணமும் இல்லை. மாறாக, வை ராஜா வை படத்தில் ஒரு பாடலில் நடனமாடியவர். இப்போது ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே விஜயசேதுபதி, பாபி சிம்ஹா என்ற இருவர் ஹீரோக்களாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவும் 3வது ஹீரோவாக நடிக்கிறாராம். முக்கியத்துவம் வாய்ந்த ரோல் என்பதால், உடனடியாக படம் இயக்க வேண்டும் என்று அவருக்குள் இருந்த ஆர்வம் போய் விட்டதாம். மேலும், அவரது அடுத்த படம் தமிழில் இல்லையாம். தெலுங்கில் பாகுபாலி படத்தில் தற்போது நடித்து வரும் பிரபாஸை வைத்து ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு படம் இயக்கும் ஐடியா அவரிடம் உள்ளதாம். ஏற்கனவே தெலுங்கில் சில ஹிட் படங்களை எஸ்.ஜே.சூர்யா கொடுத்திருப்பதால் அவர் படத்தில் நடிப்பதற்கு பிரபாஸ் ஓகே சொல்லியிருப்பதாகவும் அவர்தரப்பில் கூறப்படுகிறது.