இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
“பொல்லாதவன், ஆடுகளம்” ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன், தனுஷ் மீண்டும் இணையும் 'வட சென்னை' படம் பற்றிய அறிவிப்பை சற்று முன்னர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
“பொல்லதவன்' படப்பிடிப்பின் போதே 'வட சென்னை' படத்தின் கதையை வெற்றி மாறன் சொல்லியிருந்தார். 'விஐபி' குழுவினரின் பெயரிடப்படாத படத்திற்குப் பிறகு நான் 'வட சென்னை' படத்தில் நடிக்க உள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும், நாயகியாக சமந்தா நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும், மற்ற விவரங்கள் விரைவில்” என தனுஷ் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய 'ஆடுகளம்' படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. 'வட சென்னை' படத்தை சிம்புவை வைத்து அவர் ஆரம்பிக்கப் போகிறார் என சில வருடங்களுக்கு முன்பே சொன்னார்கள். ஆனால், அதன் பின் அந்த செய்தியும் அப்படியே அமுங்கிப் போய்விட்டது. இப்போதுதான் 'விசாரணை' என்ற குறைந்த நேரமே ஓடும் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வெற்றிமாறன்.
தனுஷ் தன்னுடைய அறிவிப்பில் 'பொல்லாதவன்' படப்பிடிப்பின் போதே 'வட சென்னை' கதையப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருப்பதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. சிம்பு நடிக்க வேண்டிய படத்தை அவர் தட்டிப் பறித்து விட்டாரோ என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே அவர் இப்படிப் போட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.