தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2015ல் ஹீரோயினே இல்லாத ஒரு படமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது நேற்று வெளியான 'டிமான்ட்டி காலனி'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் மட்டுமே படத்தில் அதிக நேரம் வரும் நடிகர்களாக இருக்கிறார்கள். வில்லனாக நடித்துள்ள அன்டில் ஜாஸ்கெலினன் கூட ஒரு சில காட்சிகளில்தான் நடித்திருக்கிறார்.
படத்தில் மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக ஒரே ஒரு காட்சியில் மட்டும் நகைச்சுவை நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். மற்றபடி படத்தில் வேறு எந்தக் காட்சியிலும் சில நிமிடங்கள் இடம் பெறும்படியாக எந்த பெண்களுமே இல்லை. வில்லனின் மனைவியாக வரும் நடிகையைக் கூட ஒரு சில வினாடிகள் மட்டுமே காட்டுகிறார்கள்.
இந்தக் காலத்தில் இப்படி பெண்களும் இல்லாமல், ஹீரோயினும் இல்லாமல் ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்தப் படம்.