இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கி தன்னை இயக்குநராக அடையாளம் காட்டிக்கொண்டார். இளையமகளான சௌந்தர்யா கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தின் மூலமாக, ஒரு இயக்குநராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். கோச்சடையான் படத்தின் தோல்விக்குப் பிறகு, படம் இயக்குவதை விட்டுவிட்டு பிரபல படநிறுவனமான ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்றார் சௌந்தர்யா. தற்போது முன்னணி படநிறுவனமாகவும், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதில் முன்னணி நிறுவனமாகவும் விளங்குவதோடு, புதிய படங்களின் உரிமத்தை வாங்கி விற்பதிலும் ஈடுபட்டுள்ளது - ஈராஸ் நிறுவனம்.
இந் நிறுவனத்தின் அனைத்து முக்கிய நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்த செளந்தர்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து "குழந்தை நன்றாக வளர்ந்த பிறகு, வேலைக்குப்போகலாம்." என்று செளந்தர்யாவுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார் ரஜினி. அப்பாவின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை செளந்தர்யா ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன.