‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
''ஸ்டூடண்ட் நம்பர்-1'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். ஜோர், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் சிபி, ஆனால் எந்தப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. இந்தசூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள சினிமாவில் போராட தயாராகிவிட்டார் சிபி. தற்போது, ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை தரணிதரன் இயக்குகிறார்.
சரித்திரம் கலந்த, திகில் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சிபிராஜ். சிபிராஜ் உடன் கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸச்சேரியும் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் ஹீரோயின் யார் என்று முடிவாகமல் இருந்த சூழலில், இப்போது பிந்து மாதவி நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சவாலே சமாளி, கலக்குற மாப்ளே படங்களில் நடித்து முடித்துள்ள பிந்து மாதவி, அடுத்தப்படியாக ஜாக்சன் துரையில் நடிக்க இருக்கிறார்.