தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சொந்தம் பந்தம் என்ற தொடரில் திலீப் என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் மணிகண்டா. இவர், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை உள்பட பல படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார். இதுவரை 150 எபிசோடுகளில் நடித்து விட்ட மணிகண்டா பாசிட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் இந்த சீரியல் மூலம் தமிழ்நாடு முழுக்க அவருக்கு ஏராளமான சொந்தங்களை இந்த சீரியல் உருவாக்கிக் கொடுத்திருக்கிறதாம்.
இதுபற்றி மணிகண்டா கூறுகையில், எனது தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக இருந்தவர். அதனால் அவர் நடித்து வந்த காலகட்டத்திலேயே நான் சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு படிப்பு, நடனம் என்று கவனம் செலுத்தத் தொடங்கினேன். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியபோது, நான் எதிர்பார்த்தபடி வேடங்கள் கிடைக்கவில்லை.
அதனால் சொந்தம் பந்தம் சீரியலில் வாய்ப்பு கிடைக்க நடிக்கத் தொடங்கி விட்டேன். அந்த சீரியல் எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் எனது நடிப்பை பார்த்து விட்டு நிறைய ரசிகர்கள் போனிலேயே தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். அதனால் இந்த ஒரு சீரியலே சின்னத்திரையில் என்னை பிரபலப்படுத்தி விட்டது என்று கூறும் மணிகண்டா, இதுதவிர சில நடன போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறாராம்.