பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும் படம் 'பத்து எண்ணுறதுக்குள்ளே'. இந்தப் படத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த படங்களிலேயும், கதாபாத்திரங்களிலும் மிகவும் வித்தியாசமான படம் இது என சமந்தா புகழ்ந்து தள்ளும் படம் இது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று விட்டதாகவும், அதனால் படம் எப்போது வெளிவரும் என்று தெரியாது என்றும் வதந்தி பரவியது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நாயகன் விக்ரமுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதனால்தான் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது என்றும் சொன்னார்கள்.
ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடந்தது போலத் தெரியவில்லை. இப்படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் ஆரம்பமாகி படத்தின் முதல் பாதி வரை முடித்து விட்டதாகவும், மீண்டும் இரண்டாம் பாதி வேலைகளை இசையமைப்பாளர் இமான் திங்கள் முதல் செய்யவிருக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை மட்டுமே இன்னும் படமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, ''விக்ரமின் கைகள் என் கைகளை விட பலம் வாய்ந்தவை, அதனால் அவருடன் சண்டை போட முடியாது. முருகதாஸ் சார் இருந்தாலும் டிரை பண்ணுகிறேன்,” என கிண்டலான பதிவு ஒன்றையும் தன்னுடைய டிவிட்டரில் போட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.