தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயகாந்த்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். ஒருக்கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது பாடகர் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ''புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'' என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் சைய்யது இப்ராஹிம் இயக்க, கிரிஷ் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
உடல் நலக்குறைவோடு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று இப்ராஹிம் ராவுத்தர் பேசியதாவது.... எனக்கு 63 வயதாகிவிட்டது. 40 வருடம் இந்த சினிமா துறையில் இருக்கிறேன். இதுவரை 32 படங்களை தயாரித்துள்ளேன். நிறைய புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்களை அறிமுகம் செய்துள்ளேன். இந்த 40 வருட சினிமா வாழ்வில் இதுவரை தவறாக, ஆபாசமான படங்களை நான் எடுத்தது கிடையாது. சினிமாவுக்கு ஜாதி, இனம், மொழி, மதம் என்று எதுவும் கிடையாது, இதில் நான் உறுதியாக இருப்பவன். முழுக்க முழுக்க கதையை நம்பிதான் படங்கள் எடுப்பேன். இந்தப்படத்தின் கதையும் அப்படித்தான்.
கோ படத்தில் ஒரு பாட்டில் வந்து போன கிரிஷை பார்த்துவிட்டு தான் அவரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குநரிடம் நானே போய் பேச சொன்னேன். இப்போது எனக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. என்னுடைய படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.