வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான பாகுபலி பல மொழிகளில் வெளியிட திட்டமிடுகிறார்கள். இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோகர் வாங்கி உள்ளார். அவர் பாகுபலி படத்தை பற்றி பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பாகுபலிக்கு பிறகு இயக்கபோகும் படம் பற்றி இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் பாகுபலிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலிக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அவருக்கு ஹாலிவுட் அல்லது பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அவர் முன்பு ஒரு சமயம் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கானை இயக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறி இருந்தார். அதனால் பாகுபலிக்கு பிறகு அவர் அமீர்கானை வைத்து இந்தி படம் இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை கரன் ஜோகர் தயாரிப்பார் என்று தெரிகிறது.