ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நண்பேண்டா படத்தின் 50வது நாள் நேற்று. ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான கெத்துவின் நிறைவு பகுதிக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது உள்ளது.
இதுவரை நெக்ஸ்ட் ஸ்டோர் பாய் கேரக்டரில் நடித்து வந்த உதயநிதி சிவகார்த்திகேயன் காக்கி சட்டையில் ஆக்ஷன் ஆழம் பார்த்த மாதிரி உதயநிதி இதில் ஆக்ஷன் களத்தில் இறங்குகிறார். ஆனாலும் ஆக்ஷன் ஹீரோவாக இல்லை. படத்தின் உதயநிதி ஒரு அப்பாவி இளைஞர். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு. தன் வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் உதயநிதியின் அப்பா சத்யராஜ் அவருக்கு நேர் எதிர். யார் தப்பு பண்ணினாலும் போட்டு பொளந்திட்டு வந்திடுவார்.