விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்.கே.செல்வமணி கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்தார். அதன் பிறகு வ.கவுதமன் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் வாழ்க்கையை தொலைக்காட்சி தொடராக இயக்கினார். கடந்த ஆண்டு குப்பி படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் வனயுத்தனம் என்ற பெயரில் தமிழிலும், வீரப்பன் அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் இயக்கினார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தற்போது கன்னடத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. ராம்கோபால் வர்மா கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலை மையமாக கொண்டு ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் சத்தமே இல்லாமல் மது சூதனன் ரெட்டி என்பவர் வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இலக்கு என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார். இவர் ஏற்கெனவே அயோத்தியா குப்பம் வீரமணி வாழ்க்கையை மையமாக கொண்டு பெருசு என்ற படத்தை இயக்கி நடித்தவர். இலக்கு படத்தில் ஸ்ரில் என்பவர் வீரப்பனாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக இயக்குனர் மதுவே நடித்திருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார், ஸ்ரீராம்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.