'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் திரைப்பட ரசிகர்களின் இதயங்களில் டிரம்ஸ் வாசித்து கொண்டிருக்கும் பியூட்டி குயின் சோனம் கபூர். லேட்டஸ்ட்டாக இவர் நடித்து வெளிவந்த, டோலி கி டோலி படம் சரியாக போகவில்லை. ஆனாலும், பாலிவுட் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை இவர் தான்.
அவருடைய பேட்டி:
கடைசியாக நீங்கள் நடித்த சில படங்கள், பெரிய வரவேற்பை பெறவில்லையே? கவலையாக உள்ளதா?
கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு நடிகருமே, படங்களில் நடிக்கும்போது, தங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைக்கின்றனர். தங்களின், பெஸ்ட் என்னவோ, அதை கொடுக்கின்றனர். ஆனால், படத்தின் வெற்றி, தோல்வி, நடிகர், நடிகையை சார்ந்தது இல்லை; ரசிகர்களின் ரசனை சம்பந்தப்பட்ட விஷயம்.
உங்களுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறதே?
இதை, தன்னம்பிக்கை என, கூற முடியாது; படங்களின் தோல்வியால், வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் கூறுகிறேன். தோல்வி படங்களில் நாம் செய்த தவறுகளை, அடுத்தடுத்த படங்களில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில், தோல்வி படங்களில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். கடினமாக உழைக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அநியாயத்தை பார்த்தால் பொங்கி எழுந்து விடுகிறீர்களே?
என்னை பொறுத்தவரை, எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசுவேன்; கருத்து தெரிவிப்பேன். அது, எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், அதற்காக கவலைப்பட மாட்டேன். ஒரு விஷயம் தவறு என தெரிந்தால், அதை கண்டிப்பதில் என்ன தப்பு? ஆனால், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசுவது இல்லை.
அதிக படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லையா?
இந்த நம்பர் விஷயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லா நடிகர்களுக்குமே இந்த பிரச்னை உள்ளது. எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பதை விட, எத்தனை நல்ல படங்களில் நடிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதேநேரத்தில், அதிக படங்களில் நடிப்பது என்பது பல விஷயங்களை பொறுத்து அமையும்.
படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
முதலில், படத்தின் கதை எனக்கு பிடித்திருக்க வேண்டும்; அடுத்ததாக, என்னுடைய கேரக்டர் மனதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். என்னுடைய கேரக்டர் தொடர்பாக எழும் சந்தேகங் கள் குறித்து, இயக்குனரிடம் கேள்வி எழுப்புவேன். அந்த கேள்விகளுக்கு, நியாயமான பதில் தேவை. படத்தின் இயக்குனர் யார் என்பதும் முக்கியம். அது, அறிமுக இயக்குனரா அல்லது பிரபலமான இயக்குனரா என்பதை பொறுத்தது அல்ல; இயக்குனர், தன்னுடைய கதையில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பது எனக்கு தெரிய வேண்டும்; அவ்வளவு தான். மற்றபடி, உடன் நடிக்கும் நடிகர்கள் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை.
சல்மான் கானுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது பற்றி?
என் முதல் படத்தில் சல்மான் கான் தான் ஹீரோ. எட்டு ஆண்டுகளுக்கு பின், இப்போது, பிரேம் ரதன் தயா பயோ என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளேன். இந்த எட்டு ஆண்டுகளில், என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் வந்து விட்டன. இந்த படத்தை, சூரஜ் ஆர் பர்ஜாத்யா இயக்குகிறார். மைனே பியார் கியா, ஹம்ஆப்கே கெயின் கோன் போன்ற படங்களை இயக்கியவர் அவர். இதுபோன்ற காதல் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, ஒவ்வொரு நடிகைக்கும் இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது; இப்போது, அதுநிறைவேறப் போகிறது.சினிமா அனுபவம் குறித்து, உங்கள் தந்தை அனில் கபூருடன் விவாதிப்பது, ஆலோசிப்பது உண்டா? வீட்டில், குடும்பத்தினருடன் பேசுவதற்கு, சினிமாவை தவிர வேறு விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனால், எப்போதாவது தான் சினிமாவைப் பற்றி பேசுவோம்; அதுவும், சீரியசான விவாதம் எல்லாம் இருக்காது.
உங்கள் தந்தை, ஹாலிவுட்டிலும் பிரபலமாகி விட்டாரே?
என்னை பொறுத்தவரை, என் தந்தை தான் ஹீரோ. அவருடைய மகளாக பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் உள்ள மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர்; இதனால் தான், ஹாலிவுட்டிலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.