தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வெள்ளித்திரை நிகழ்ச்சி 500வது எபிசோடை தொடுகிறது. இதனை ஒத்தவீடு படத்தை இயக்கிய ஜி.பாலன் இயக்குகிறார். தேவி கிருபா தொகுத்து வழங்குகிறார். புதுமுகம் அறிமுகம், இந்த வார படங்கள், படப்பிடிப்பு தகவல்களை சொல்லும் திரைமலர், அந்த நாள் ஞாபகம் உள்ளிட்ட பல பகுதிகளை கொண்டதாகும்.
இந்த நிகழ்ச்சியின் 500 வது எபிசோட் நாளை ஒளிப்பரப்பாகிறது. இதில் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், நடிகர்கள் பிரபு, ராதாரவி, ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், சுப்பு பஞ்சு, நடிகைகள் கார்த்திகா, கோவை சரளா, ஆகியோர் நிகழ்ச்சி குறித்து பேகிறார்கள்.
"வெள்ளித்திரை நிகழ்ச்சி மூலம் சினிமா பற்றிய பல தகவல்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புதிய உற்சாத்துடன் வழங்க முடிந்தது. நேற்றுதான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. அதற்குள் 500 எபிசோட் வந்துவிட்டது" என்கிறார் தேவி கிருபா. "இனி வரும் எபிசோட்களில் பல புதிய அம்சங்களை சேர்க்க இருக்கிறோம்" என்றார் இயக்குனர் ஜி.பாலன்.