விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
அறிமுகமான முதல் படத்திலேயே, உன் சிரிப்பினில், உன் சிரிப்பினில் மனது பாதியும் போக என, சிலிர்க்க வைத்த அழகு தேவதை ஆண்ட்ரியா. மலையாள நடிகருடன் காதல், இளம் இசையமைப்பாளருடன் முத்தம் என, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். கண்ணும் கண்ணும் நோக்கியா என, ஒரு பாடலில் கிறங்கடித்தால், இதுவரை இல்லாத உணர்விது என, அடுத்த பாடலில் ரசிகர்களை உருக வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். அவருடன் பேசியதிலிருந்து...
கமல் படங்களில் அதிகமாக நடிக்கிறீர்களே; அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயம்?
ஒவ்வொரு படத்திலும், நான் அவரிடம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன். கமல் சாருக்கு பல திறமைகள் உள்ளன. நான், சினிமாவில் அறிமுகமாகும்போது, ஒரு இயக்குனர், கமல் சார் நடிக்க அழைத்தால், ஒரு சீன் கொடுத்தாலும் நடிக்க போயிடு என்றார். மற்ற படங்களில் படம் முழுக்க நமக்கு காட்சிகள் இருந்தாலும், நமக்கு அதில் பெரிய அளவில் வேலை இருக்காது. ஆனால், கமல் சார் படங்களில்,ஒரு சீன் நடித்தாலும், பிரமாதமா வந்திருக்கும். அதனால், கமல் சார் நடிக்க அழைத்தால், எந்தவித தயக்கமும் இல்லாமல், யெஸ் சொல்லிடுவேன்.
இப்போது, பல படங்களில் பாடுகிறீர்கள்; ஆனால், உத்தம வில்லன் படத்தில் பாடவில்லையே ஏன்?
எல்லா படங்களிலும் நீங்க பாடுறீங்க; இந்த படத்தில் வேண்டாம் என, கமல் சார் சொல்லிட்டார். அவரே அப்படி கூறியபின், எப்படி நான் பாடுவது?
எந்த அடிப்படையில் படத்தை தேர்வு செய்கிறீர்கள்?
படத்தில் வேலை செய்யும் மொத்த டீமும் யார் என்பதை பார்ப்பேன். ஏனெனில், இது, ஒரு நாள் வேலை அல்ல. இதனால், நம் கூட யார் யார் வேலை செய்கின்றனர் என்பதை பார்ப்பது அவசியம். படத்தின் கதையும், அதில் என் கேரக்டரும் எனக்கு திருப்தியாக இருக்க வேண்டும். அடுத்ததாக, அந்த டீமின் கேப்டனாக இருக்கும் இயக்குனர் யார் என்பதை பார்ப்பேன்.
சினிமாத்துறை பற்றி உங்கள் புரிதல் என்ன?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இப்போது வரைக்கும் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பில் என் வேலை முடிந்தால் போதும். அவ்வளவு தான்; அங்கிருந்து கிளம்பிடுவேன். அதன்பின், எனக்கென ஒரு சின்ன வாழ்க்கை உள்ளது; அந்த வாழ்க்கையில் வாழச் சென்று விடுவேன். மற்றபடி, புத்தகங்கள் படிப்பேன் என்றெல்லாம், கப்சா அடிக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை, நடிப்பு என்பது ஒரு தொழில்; அவ்வளவு தான்.
உங்களைப் பற்றி அடிக்கடி கிசு கிசுக்கள் வருகின்றனவே; கஷ்டமாக இல்லையா?
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போது கிசு கிசு கொஞ்சம் குறைந்து விட்டது. எதையும் காதில் போட்டுக்காமல், என் வேலையை மட்டும் பார்க்கிறேன்.
எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
மணிரத்னம் சார் படம் மாதிரி, முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்கணும். தமிழில்,
இதுவரை அப்படி ஒரு படத்தில் நடிக்கவில்லை. மலையாளத்தில், கிளாமர் ரோலில் தான் நடிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்த மாட்டார்கள். அங்கு, வித்தியாசமான கதைகள் அதிகமாக
கிடைக்கின்றன. தெலுங்கிலும் நல்ல மரியாதை இருக்கு; வரவேற்பு கொடுக்குறாங்க. வேலை பார்க்க சந்தோஷமா இருக்கு.
உங்களை கவர்ந்த நடிகை?
உண்மையை சொல்கிறேன். தமிழில், பழைய நடிகைகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்திய சினிமாவில், வயசு அதிகமாக அதிகமாக, நடிகைகளுக்கு முக்கியத்துவம்
குறைந்துக்கொண்டே வரும். ஆனால், ஹாலிவுட்டில் அப்படி அல்ல; வயது அதிகமாக அதிகமாக, அங்குள்ள ஹீரோயின்களுக்கு கிராக்கி அதிகரிக்கும். சினிமா தவிர, வேறெந்த துறையிலும் இப்போதைக்கு ஆர்வமும் இல்லை; ஆசையும் இல்லை. வாழ்க்கையில் எது கிடைக்குதோ, அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். இது தான் ஆண்ட்ரியா!