தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். அதோடு தனக்கு ஜாமின் வழங்க வேண்டியும் சல்மான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மாலை 4 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற மும்பை ஐகோர்ட், சல்மான் கானுக்கு இரண்டு நாள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனால் சல்மான் இரண்டு நாள் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த சல்மான் கானுக்கு இந்த இரண்டு நாள் ஜாமின் ஒரு சிறு ஆறுதல் தான். இந்த இரண்டு நாளில் சல்மான், அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.