சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சல்மான்கான், ஷாருக்கான் என வட இந்திய நடிகர்களில் தொடங்கி விஜயகாந்த், ஆர்யா, ஜீவா, த்ரிஷா, ஆர்.கே, கருணாஸ் என நம்மூர் நட்சத்திரங்களில் பலரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசையில் ஹோட்டல் பிஸினஸில் குதிக்காதவர்களே இல்லை எனலாம்!.
இதில் சிலர் வெற்றியும், பல நட்சத்திரங்கள் தோல்வியும் கண்டு வந்தாலும் ஹோட்டல் பிஸினஸ் என்றால் ஒரு கை பார்த்து விடலாம்... என களம் இறங்காத கலைஞர்கள் குறைவு! அந்த வகையில் ஹோட்டல் பிஸினஸில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் இடம் பிடித்தே தீருவேன்... என கங்கணம் கட்டிக்கொண்டு சென்னையில் நல்லதொரு செட்டி நாடு ரெஸ்டாரண்ட்டை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு... எனும் செய்தி கேள்விப்பட்டு அவரிடமே விசாரித்தோம்.
நீங்க கேள்விபட்ட விஷயம் உண்மை தாங்கண்ணே...இத்தனை நாளா நடிச்சு, சிரிச்சு குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருந்தேன். அத வச்சி, ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி நாலு எழுத்து படிச்சு அறியாத எனக்கு, நாலு ஏழை பிள்ளைங்களுக்கு பயன்படுறமாதிரி இஸ்கூல் ஆரம்பிக்கணுங்கறது ஆசை... அது முடியாத பட்சத்தில் டாக்டருக்கு படிச்ச என் பொஞ்சாதிக்காக சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டி தரணுங்கறது ஆசையா இருந்துச்சு! இந்த சமயத்தில கூட்டாளிங்க சில பேரு கொடுத்த ஐடியா., கொஞ்சம் காச வச்சிக்கிட்டு முழுசா இஸ்கூலும் கட்டமுடியாது, பெரிசா ஆஸ்பத்திரியும் கட்டமுடியாது... அந்த காசுல ஒரு படம் சொந்தமா எடுத்தோமுன்னா நல்ல லாபம் கிடைக்கும்... அத வச்சு இஸ்கூலு, ஆஸ்பத்திரி, இரண்டையும் பெரிய லெவல்ல கட்டலாம்... அப்படின்னாங்க... ஐடியா நல்லாருக்கேன்னு அகலக்கால் வச்சேன்.. அப்படி சொன்னவரையே டைரக்டரா போட்டு “வேல் முருகன் போர்வெல்ஸ்”ன்னு ஒரு படத்தை சொந்தமா தயாரிச்சு ஹீரோவாவும் நடிச்சேன். ஒரு கோடி ரூபாக்கு மேல நஷ்டம்! அதான்., ஆரம்பத்துல டீக்கடையில வேல பார்த்த நாம் ஏன்? டிபன் கடை போடக்கூடாதுன்னு யோசிச்சேன்..? இந்த சமயத்துல என் கோடம்பாக்கத்து ஆருயிர் நண்பர் பாடலாசிரியர் ஜெயம்கொண்டானின் ஞாபகம் வந்துச்சு!