ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பாலிவுட் நடிகை வித்யாபாலன் பெரும்பாலும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அவர் நடிக்கும் கேரக்டர்கள் வேண்டுமானால் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர அவர் ரொம்பவே மென்மையான மனம் கொண்டவர்.. அவரை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் படப்பிடிப்பின்போது கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மோஹித் சூரி என்பவர் இயக்கும் 'ஹமாரி அதூரி கஹானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ராஜ்குமார் ராவ் மற்றும் இம்ரான் ஹாஸ்மி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். தனது சைக்கோ கணவனிடம் மிகுந்த டார்ச்சரை அனுபவிக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம் தான் இது. இதில் வித்யாபாலனின் கொடுமைக்கார கணவராக நடிக்கும் ராஜ்குமார் ராவ், படப்பிடிப்பின்போது வித்யாபாலனை கன்னத்தில் அறைய வேண்டிய காட்சியில் நிஜமாகவே அறைந்துவிட்டார்..
அதுவும் ஒன்றல்ல.. மூன்று முறை அறைந்துள்ளார். அவரின் இந்த செயலால் படக்குழுவினர் ஸ்தம்பித்து நிற்க, பின்னர்தான் தெரிந்தது வித்யாபாலன், ராஜ்குமார் இருவரும் காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு நடித்தார்கள் என்று..
ரியாலிட்டிக்காக என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..!