ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உடனடியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்வதில் கேரளாவை பொறுத்தவரை எப்போதும் மம்முட்டியும் அவரது ரசிகர்மன்றமும் முன்னணியில் இருக்கின்றனர்.. அந்தவகையில் சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல் இழந்த எண்ணற்றோருக்கு தங்களால் ஆன உதவியை செய்யும் விதமாக அபுதாபியில் உள்ள மம்முட்டி ரசிகர்மன்றம் மிகப்பெரிய தொகை ஒன்றை திரட்டியது.
இந்த தொகையை நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உணவு தேவைக்காக செலவிடும்படி கூறி, அபுதாபியில் உள்ள நேபாள தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல மூன்று வருடங்களுக்கு முன்பு சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருள்களை, மம்முட்டி இலவசமாக அளித்து உதவினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.