'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய தலைவலி என்பதை தாணு இப்போது புரிந்து கொண்டிருப்பார். கேயார் தலைவராக இருந்தபோது....அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விரக்தியில் இருந்தார் தாணு. அதன் காரணமாக கேயாரை செயல்படவிடாமல் வழக்குக்குமேல் வழக்குப்போட்டு அவரை செயல்படவிடாமல் முடக்கிப்போட்டார். பின்னர் அதையே காரணமாகச் சொல்லி தான் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு தினமும் பேச்சுவார்த்தை... பஞ்சாயத்து என அவரது பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் உத்தமவில்லன் படம் தொடர்பான பஞ்சாயத்தில்... அந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த ஜஸ்வந்த்பண்டாரிக்கு எதிராக தாணு செயல்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. உத்தமவில்லன் படத்தை வெளியே கொண்டு வருவதற்காக அப்போது அவர் செய்த விஷயம்...தற்போது தாணுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததும்... ஜஸ்வந்த் பண்டாரியை சந்தித்து அவரிடம் பெரும் தொகையை பைனான்ஸ் கேட்க சென்றிருக்கிறார் தாணு. உத்தமவில்லன் பஞ்சாயத்தில் அவர் நடந்து கொண்டவிதத்தினால் அப்ஸெட்டாகி இருந்த ஜஸ்வந்த் பண்டாரி தாணுவை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுமட்டுமல்ல, ரஜினி படத்துக்கு பைனான்ஸ் தர மாட்டேன் என்றும் சொல்லி விட்டாராம்.