அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மும்பை : போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி, போதையில் காரை அதிவேகமாக ஓட்டி, பந்த்ரா, அமெரிக்கன் பேக்கரி முன்பு சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மும்பை கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. சல்மான் தான், அரசு தரப்பு என மாறி மாறி விவாதங்கள் நடந்து வந்தன. ஒருவழியாக ஏப்ரல் 20ம் தேதி வழக்கு விசாரணை முடிந்து மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குற்றவாளி என தீர்ப்பு
இந்தசூழலில் ஸ்ரீநகரில், படப்பிடிப்பில் இருந்த சல்மான் கான், நேற்று(மே 5ம் தேதி) மாலை மும்பை வந்தடைந்தார். இன்று காலை 9.30 மணிக்கே தனது வீட்டை விட்டு கிளம்பிய சல்மான், கோர்ட்டில் ஆஜரானார். அப்போது சல்மான் கான், தான் காரை ஓட்டவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஆனால் அவர் தான் காரை ஓட்டியுள்ளார் என பலர் சாட்சியளித்துள்ளனர். இதன்மூலம் சல்மான் கான், மது அருந்தி கார் ஓட்டியது உண்மை தான், அவர் தான் விபத்து ஏற்படுத்தியுள்ளார் எனவே அவர் தான் குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.
5 ஆண்டு சிறை தண்டனை
சல்மான் குற்றவாளி என 11.10 மணியளவில் நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மேல் இன்றே மதியத்திற்கு மேல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
மேல்முறையீடு செய்ய சல்மான் முடிவு
தனக்கு விதிக்கப்பட்டதை தண்டனையை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். அதுமட்டுமின்றியும் தனக்கு ஜாமின் வேண்டியும் மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு இரண்டு நாட்கள் மட்டும் ஜாமின் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ரூ.200 முதலீடு என்னவாகும்.?
சல்மான் கானை நம்பி சுமார் ரூ.200 கோடி முதலீட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. சல்மான் தான் குற்றவாளி என மும்பை கோர்ட் அறிவித்து, அவருக்கு சிறை தண்டனையும் வழங்கியுள்ளதால் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது: சல்மான் கான், தற்போது, பஜ்ரங்கி பாஜியானா, பிரேம் ரதன் தாங் பயோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் படத்தில், கரீனா கபூரும், இரண்டாவது படத்தில் சோனம் கபூரும், அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இந்த இரு படங்களின் படப்படிப்பும், 70 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டன. இதுதவிர, தபாங் 3, என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி உட்பட, நான்கு படங்களில் நடிக்க சம்மதித்து உள்ளார். சல்மான் கானை நம்பி, இந்த படங்களின் தயாரிப்பாளர்கள், 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி, சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி தொடர்ந்து அவரால் படப்பிடிப்பில் பங்கு கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போதைய சூழலில் நாங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சல்மான் வழக்கு கடந்து வந்த பாதை...
செப்., 28: சல்மான்கானின் ரத்த மாதிரி பரிசோதனை. குடித்து விட்டு கார் ஓட்டிய குற்றச்சாட்டில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் சல்மான்கான் உடன் ஜாமினில் வெளியே வந்தார்.
* அக்., 1: மோட்டார் வாகன சட்டம் 1988, மும்பை மதுவிலக்கு சட்டம் 1949ன் படி சல்மான் மீது வழக்குப்பதிவு.
* அக்., 2: வழக்கு ஐ.பி.சி., - 304 பிரிவுக்கு மாற்றம்.
* அக்., 7: சல்மான்கான் மீண்டும் கைது.
* அக்., 21: பந்த்ரா மேஜிஸ்திரேட் கோர்ட்டில் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்.
* அக்., 24: சல்மான்கானுக்கு மீண்டும் ஜாமின்.
2003 ஜூன்: ஐ.பி.சி., - 304 பிரிவு - இந்த வழக்குக்கு பொருந்தாது என சல்மான்கான் மும்பை ஐகோர்ட்டில் மனு.
* டிச., : இந்த வழக்குக்கு 304 பிரிவு பொருந்துமா என்பதை மேஜிஸ்திரேட் கோர்ட் முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
2006 அக்., : மேஜிஸ்ட்ரேட் கோர்ட் சல்மான்கான் மீதான குற்றச்சாட்டை ஏற்று வழக்கை பதிவு செய்தது.
2013 டிச., 23: 17 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய மேஜிஸ்ட்ரேட், மும்பை செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றி உத்தரவு.
2014 ஏப்., 27: செஷன்ஸ் கோர்ட்டில் புதிதாக விசாரணை துவக்கம்.
* ஜூலை: 63 சாட்சியங்கள் குறித்த கோப்புகள் காணவில்லை என புகார். கோப்புகளை கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவு.
* செப்., 12: கோப்புகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
2014 நவ., 24: வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டுக்கு, அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்.
2015 மார்ச் 25: 24 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
* மார்ச் 27: சல்மான்கானின் வாதம் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டது.
* மார்ச் 31: சல்மான்கான் கார் டிரைவர் "நான் தான் காரை ஓட்டினேன், சல்மான்கான் காரிலேயே இல்லை என வாதம்.
* ஏப்., 20: இரு தரப்பு விசாரணை முடிந்தது.
* ஏப்., 21: தீர்ப்பு மே 6ல் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு.
* மே 6: சல்மான்கான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு. 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு. இரண்டு நாள் ஜாமின்.