Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பி.யூ சின்னப்பா: தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ

05 மே, 2015 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinemas-First-Action-Hero---P.U.Chinnappa

தமிழ் சினிமாவில் எப்போதுமே ஆக்ஷனுக்கு ஒரு ஹீரோ, நடிப்புக்கு ஒரு ஹீரோ டாப்பில் இருப்பார்கள். எம்.ஜிஆர் ஆக்ஷன் ஸ்டார் என்றால் சிவாஜி நடிப்பு திலகம், ரஜினி ஆக்ஷன் ஸ்டார் என்றால் கமல் நடிப்பு ஸ்டார். இதேபோன்று கருப்பு வெள்ளை காலத்தில் தியாகராஜ பாகவதர் நடிப்பு ஸ்டார் என்றால் ஆக்ஷன் ஸ்டாராக இருந்தவர் பி.யூ சின்னப்பா. தன் குரலாலும், கம்பீர தோற்றத்தாலும் சூப்பர் ஸ்டாரக விளங்கிய பி.யூ.சின்னப்பாவுக்கு இன்று (மே 5) 99வது பிறந்த நாள். அடுத்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா வருகிறது.


அந்த மாபெரும் கலைஞனை சற்று நினைவேற்றிக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் ஒருவர் இனிமேல் சொத்துக்களே வாங்க கூடாது என்று ஒருவரை அரசே கட்டுப்படுத்தியது என்றால் அது பி.யூசின்னப்பாவைத்தான். நடித்து சம்பாதித்த பணத்தில் புதுக்கோட்டையில் சொத்துக்களாக வாங்கி குவித்தபோது போகிற போக்கை பார்த்தால் நமது அரண்மணையையும் வாங்கி விடுவார் என்று பயந்த புதுக்கோட்டை சமஸ்தானம் அவருக்கு சொத்து வாங்க தடைவிதித்தது வரலாறு.


புதுக்கோட்டை நகரில் 1916ம் ஆண்டு பிறந்தவர் பி.யூ.சின்னப்பா. இவரது தந்தை நாடக நடிகர். தந்தையைபோல தானும் பெரிய நாடக நடிகராக வேண்டும் என்று விரும்பினார். இதனால் தந்தை நாடகத்தில் பாடும் பாடல்களை மனப்பாடம் செய்து தானும் பாடத் தொடங்கினார். நாட்டில் ஏற்பட்ட திடீர் பஞ்சம் நாடக தொழிலை நசுக்கியது. குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சின்னப்பா கயிறு திரிக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கினார்.


ஆனால் தந்தைக்கு சின்னப்பா தனது நடிப்பு வாரிசாக வேண்டும் என் விரும்பினார். இதனால் வறுமை மகனை தாக்கிடக்கூடாது என்பதற்காக மீனலோசினி வித்வபால சபா என்ற நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டார். நாடக நடிப்பு பயிற்சியோடு எடுபிடி வேலைகளை செய்து வந்த சின்னப்பாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது சதாரம் என்ற நாடகம். அதில் திருடனாக நடித்தது பேசப்பட்டது. அதன் பிறகு எல்லா நாடகத்திலும் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது.


அதன்பிறகு ஒரிஜினில் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு நாடகங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மாதம் 75 ரூபாய் சம்பளம். சின்னப்பா ஹீரோவாக நடித்த நாடகங்களில் எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா ஆகியோர் சிறு சிறு வேடங்களில் நடித்தனர். எம்.ஜி.ஆர் சில காலம் சின்னப்பாவின் உதவியாளர் போன்று இருந்தார்.


சின்னப்பாவின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அவரது பாடல்களை கேட்பதற்காகவே மக்கள் வண்டிகட்டிக்கொண்டு நாடகம் பார்க்க கிளம்பினார்கள். இந்த நாடகத்தில் சின்னப்பாவின் இத்தனை பாடல்கள் உண்டு என்று சொல்லியே நாடகத்துக்கு கூட்டம் சேர்த்தார்கள். சின்னப்பாவின் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் சென்னையில் ஒரே அரங்கில் ஒரு வருடத்துக்குமேல் நடந்தது. ஆங்கிலேயர்கள்கூட ஆர்வமாக பார்த்த நாடனம் அது.


ஒரு கட்டத்தில் நடிப்பை விட பாடுவதில் ஆர்வம் அதிகமானபோது முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டார். தமிழ்நாடு முழுவதும் கச்சேரி செய்தார். அப்போது திரைப்படம் அறிமுகமானதால் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டு அதற்காக சிலம்பம், குஸ்தி, கத்திச் சண்டை, வெயிட் லிப்டிங், குத்துச் சண்டை ஆகியவற்றை கற்றுக் கொண்டு சினிமாவில் நடிகரானார். ஜோதிடமும், மாந்திரீகமும்கூட அவருக்கு தெரியும். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த சவுக்கடி சந்திரகாந்தா சின்னப்பாவுக்கு முதல் படம். முதல் படத்திலேயே ஆக்ஷன் அடிதடிதான். 1935ம் ஆண்டு இது வெளிவந்தது. அதன் பிறகு பஞ்சாப கேசரி, அனாதைப்பெண், யாநாதி படங்களில் நடித்தார். 1940ம் ஆண்டு இரட்டை வேடத்தில் நடித்த உத்தமபுத்திரன்தான் அவரை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது. அன்றுள்ள இளைஞர்கள் அவரைப்போல உடை அணியவும், கிராப் வெட்டிக்கொள்ளவும், பொட்டு வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களைபோல பாகவதர், சின்னப்பா ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.மனோன்மணியம், ஜகதலபிரதாபன் உள்பட 30 படங்களில் பாடி நடித்த பி.யூ சின்னப்பா தனது 35வது வயதில் மறைந்தார்.


நடிக மன்னன் என்ற பட்டத்துடன் வாழ்ந்த அந்த மாபெரும் கலைஞன் தன் குறுகிய காலத்தில் படைத்த சாதனைகள், வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. இன்றைக்கு சிக்ஸ் பேக் வைத்துக் கொள்வது பெரிய சாதனை என்கிறார்கள். அந்தக் காலத்தில் 8 பேக் வைத்து நடித்த கலைஞன் சின்னப்பா. இக்கால நடிகர்கள் அவர் வாழ்க்கையை படித்தால் கர்வத்தை கழற்றி வைத்துக் கொள்வார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in