பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருவண்ணாமலைக்கு பிறகு சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக கருதப்படுவது கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையாகும். இங்கு வாழ்ந்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் சினி சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் சாய் ரமேஷ் என்பவர் இதனை இயக்கி உள்ளார். அருண் கதையின் நாயகனான நடித்துள்ளார். அர்ச்சனாசிங் கதையின் நாயகியாக நடித்துள்ளார். டி.கவுதம சந்திரன் இசை அமைக்கிறார். ஏ.அஜய் ஆதித் ஒளிப்பதிவு செய்கிறார். வெள்ளியங்கரி மலை பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
"இயற்கையின் சக்தியை வென்றவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சித்தர்கள் வெள்ளியங்கிரி மலை பகுதியில் நிறைய வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆதிகுரு சித்தர். அவரின் வாழ்க்கை அதிசயங்கள் அந்த பகுதியில் பிரபலமானது. அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளோம். இது பக்தி படமோ, மாயாஜால படமோ அல்லது எல்லா சக்திகளும் நிறைந்த வரலாற்று படம். விரைவில் வெளியிட இருக்கிறோம்.