'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தீனா படத்தை இயக்கிய காலத்திலிருந்தே சம்பத்குமார் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தார். முருதாஸின் நிழல்போலவே எந்நேரமும் அவருடனேயே இருப்பார். மிக நம்பிக்கையான உதவியாளராக இருந்த சம்பத்குமாருக்கும் முருகதாஸுக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்பட.... குட்பை சொல்லிவிட்டு விலகிப்போனார். பல வருட முயற்சிக்குப் பிறகு தயாரிப்பாளராகி, தற்போது இருவர் ஒன்றானால் என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இருவர் ஒன்றானால் என்ற இந்தப் படம் தயாரானது நேற்றுவரை யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று வெளியான இந்தப் படத்தின் விளம்பரம் தற்போது அந்தப் படத்துக்கு வில்லங்கமாகிவிட்டது.
இருவர் ஒன்றானால் படத்தின் விளம்பரத்தில், ப்ரம் அஸோஸியேட் ஆப் ஏ.ஆர்.முருகதாஸ் - என்ற வாசகம்தான் இடம்பெற்றுள்ளது. இதுதான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை டென்ஷனாக்கிவிட்டது. முருகதாஸிடம் வேலை பார்த்த அனைவரும் சுமூகமாகவும் அவரது ஆசியுடனும்தான் சென்றள்ளனர். சம்பத்குமார் மட்டும் முருகதாஸிடம் சண்டைப்போட்டுக் கொண்டு அவரை தரக்குறைவாகத் திட்டித் தீர்த்துவிட்டு விலகினாராம். அப்படிப்பட்ட சம்பத் இப்போது தன் பெயரை பயன்படுத்துவதை விரும்பவில்லை.
இது பற்றி சம்பத்குமாரிடம் பேசியபோது... படத்தின் விளம்பரங்களில் இருந்து அந்த வாசகத்தை நீக்க மறுத்துவிட்டாராம். தன்னிடம் வேலை பார்த்த ஒருவர் தன்னை மதிக்காவில்லை என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.ஆர்.முருகதாஸ் இது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.