ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு முன்னணி நாயகிக்கு திருமணம் ஆகி விட்டாலே அவரை அத்துடன் அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதற்கு மட்டும்தான் அழைப்பார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் இங்கு மட்டும் ஒரே நிலைமைதான். ஆனால், திருமண நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தால் அவரை நடிக்க அழைப்பார்கள் என்ற நிலையாக மாறிவிட்டது. அதிலும் அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டதாக செய்தி வெளிவந்தால் பல படங்களில் நடிக்க அழைப்பார்கள் என்பது ஒரு எழுதாத சட்டமாக வந்து விட்டதோ என்று யோசிக்க வைக்கிறது.
இது த்ரிஷா விவகாரத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி வருகிறது. த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்குமான திருமண விவகாரம் ஆரம்பமான உடனே அந்த விஷயத்தை 'என்னை அறிந்தால்' படம் வெளி வரும் வரை சொல்ல வேண்டாம் என இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால், அதற்கு முன்பே த்ரிஷா அவருடைய திருமணத்தைப் பற்றி வெளியில் சொன்னார். அதையும் மீறி 'என்னை அறிந்தால்' படம் வெளிவந்து த்ரிஷாவும் அவருடைய அழகாலும், நடிப்பாலும் அதிகம் பேசப்பட்டார்.
அதன் பின் த்ரிஷாவுக்குத் தொடர்ச்சியாக மேலும் பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருந்தன. இதனிடையே, த்ரிஷா - வருண்மணியன் இடையிலான திருமணம், நிச்சயத்துடனே முடிவுக்கு வந்ததாக தமிழ், தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை எழுதி வந்தாலும் அவர்களிருவரின் தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாமலே உள்ளது.
இதனிடையே த்ரிஷா, முதன் முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “என்னுடைய இந்த சிறப்பான நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் முதல் முறையாக 'அரண்மனை 2' படத்தில் நடிக்கப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறேன். ஆயுத எழுத்து, நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா” ஆகிய படங்களுக்குப் பிறகு அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறேன். என்னுடை டார்லிங் தோழியான குஷ்புவின் தயாரிப்பு நிறுவனத்தில், அவருடைய கணவர் இயக்கத்தில் நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.