Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலஹாசனுக்கு, கே.பாலச்சந்தர் எழுதிய கடைசி கடிதம்

04 மே, 2015 - 14:58 IST
எழுத்தின் அளவு:
K.-Balachander-wrote-letter-about-Kamal

கமல் என்ற மகா கலைஞனை கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தவர் கே.பாலச்சந்தர். நல்ல குரு, சிஷ்யன் உறவுக்கு இப்போதும் பாலச்சந்தரையும், கமலையும் அடையாளம் காட்டுவார்கள். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தரை பாலச்சந்தராகவே பதிவு செய்திருக்கிறார் கமல். உத்தம வில்லன் படத்தை பார்த்தவர்கள். இயக்குனர் சிகரத்தை இழந்த வலியை உணர்கிறார்கள். உத்தம வில்லன் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் கே.பாலச்சந்தர் கமலஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.


அதில் கே.பாலசந்தர் எழுதியிருப்பதன் சுருக்கம் வருமாறு: கமலை நான் கண்டறியவில்லை. அவரை அவரே கண்டறிந்து கொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தேன். அதன் மூலம் என்னை நானே அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. கமல் சினிமா வீதிகளில் நடக்க கற்றுக் கொண்டபோது தனது கையை பற்றிக் கொள்ள எனக்கு அனுமதி அளித்தார். அடுத்து அவரது கற்பனா சக்தியின் எல்லையை காண்பித்தபோது நான் அதில் ஆராய்ந்தேன். அவரது படைப்பாற்றலின் எல்லை விரிந்தபோது அதற்கான பசி அதிகரித்தபோது நான் அவரை மனப்பூர்வமாக என்னிடமிருந்து விடுவித்தேன். அவர் தன்னை அறிந்து கொள்ள சிறகுகள் விரித்து பறந்ததைப் பார்த்தேன்.


கமல் எந்த விதியையும் பின்பற்றுபவரல்ல, தனக்கான விதியை தானே உருவாக்குகிறார். பின்பு அவரே அதை உடைத்து புதிய விதியை உருவாக்குவார். அவருக்கு தெரிந்த அனைத்தும் நான் கற்றுக் கொடுத்ததல்ல. எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். மற்றவற்றை அவரே படித்து, பார்த்து, அனுபவித்து கற்றுக் கொண்டார். தனது எல்லைகளுக்கு அப்பால் செல்ல அவர் என்றைக்குமே தயங்கியதில்லை


சினிமாவுக்காக தனது புகழையும், பணத்தையும் யாரும் கமலைப்போல பணயம் வைத்ததில்லை. கமல் பெற்றதை விட இழந்ததே அதிகம். போட்டிகளையும், போட்டியாளர்களையும் கடந்தவர் அவர். இந்தியாவின் மீதிருக்கும் தீராத பற்றே அவர் உற்சாகத்துக்கு காரணம். அவர் தனித்து உயர்ந்து நிற்கிறார். அவர் ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்.


அவரது பாதங்கள் இந்திய மண்ணோடு கலந்து உறுதியாக நிற்கின்றன. புகழ் தரும் சலனத்துடன் சண்டையிட்டு நிலைத்து நிற்கும் உண்மையான, நிலையான படைப்பாற்றலை தேடி நிற்கிறார். அதில் காயங்கள் ஏற்பட்டாலும் அவர் தோற்கவில்லை. தாழ்ந்து போகவில்லை. டேய் கமல் ரொம்ப பெருமையா இருக்குடா...


இவ்வாறு பாலச்சந்தர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in