டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினியின் படம் வெளியான சில நாட்களில் அவரது அடுத்தப் படம் பற்றிய வதந்திகள் கிளம்புவது புதிய விஷயமல்ல. ரஜினி சூப்பர்ஸ்டாராக உருவெடுத்த காலத்திலிருந்தே நடப்பதுதான். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி படு தோல்வி அடைந்த 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மீடியாவின் காதுகளுக்குப் படாமல் இன்னொரு தகவலும் திரையுலகில் அடிபட்டு வருகிறது. சுந்தர்.சி.தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பதே அந்த தகவல்.
காஞ்சனா -2 படத்தின் வெற்றியை வைத்து, அடுத்து ரஜினியை இயக்கப் போகிறவர் ராகவா லாரன்ஸ் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது திடீர் திருப்பமாக ரஜினியின் அடுத்த படத்தை 'மெட்ராஸ்' படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தான் இயக்க போகிறார் என்று செய்தி பரவி இருக்கிறது.
அந்த படத்தை சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரபூர்வமான எந்த தகவலும் வெளியாகாத நிலையில் 'அட்டகத்தி' தினேஷ், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினியை இயக்கப் போவது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை வைத்தே பா.ரஞ்சித், ரஜினி படத்தை இயக்கப் போவதாக செய்தி பரவி உள்ளது!
உண்மையில் என்னதான் நடக்கிறது?
தனக்கு வேண்டியப்பட்டவர்களின் சிபாரிசில் சில இயக்குநர்கள் கதை சொல்ல விருப்பம் தெரிவிக்கும்போது அதை தட்டமுடியாமல் ரஜினி கதை கேட்பது வழக்கம்.
அப்படி சூர்யாவின் சிபாரிசில் பா.ரஞ்சித்திடம் கதை கேட்டாராம் ரஜினி. மற்றபடி அவரது இயக்கத்தில் நடிப்பதாக ரஜினி தரப்பில் உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லையாம்.
அதுமட்டுமல்ல, தன் அடுத்தப்படத்தை ரஞ்சித் இயக்குவதாக வெளிவந்த செய்தியை ரஜினி தரப்பு ரசிக்கவில்லை என்றும் கேள்வி.