பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அந்நிய நாட்டவரை இந்த மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என எதிர்த்து போராடிய மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் தான் குஞ்சாலி மரைக்காயர். அந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்கவேண்டும் என்கிற ஆர்வம் பல மலையாள இயக்குனர்களுக்கு இன்றும் உண்டு. ஆனால் நாடக வடிவில் அதற்கு முதலில் பிளையார் சுழி போட்டவர் பிரபல மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார்.
மலையாள சினிமாவில் 35 வருட சரித்திரம் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர்.. இவர்தான் குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகிறார். கடந்த ஜனவரியில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க நாள் விழாவில் கூட 'குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அரங்கேற்றினார். அதில் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடித்த அதிசயமும் அப்போது அரங்கேறியது..