டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜீவாவின் சினிமா கேரியரை சிங்கம்புலிக்கு முன்பு சிங்கம்புலிக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பெல்லாம் அவரது படங்களில் வசனங்கள் ரொம்ப டீசன்டாக இருக்கும். ஆனால் அதன்பிறகு படத்துக்குப் படம் மச்சி, பச்சி என்று லோக்கல் தமிழில் பேசி நடித்தார்.
இதனால் கோடம்பாக்கத்தில் ஜீவாவை மச்சி நடிகர் என்று அடைமொழி வைத்து அழைக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், ஒருகட்டத்தில் ஜீவாவுக்கே இது பிடிக்கவில்லை. தன்னைத்தேடி வரும் டைரக்டர்களெல்லாம் மச்சி என்ற வசனத்தை வலுக்கட்டாயமாக திணித்ததால் தடுமாறிக்கொண்டு வந்தார்.
இந்தநிலையில்தான், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிய யான் படம் அவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் தனது வழக்கமான டயலாக்குகள் எதுவும் இல்லாமல் டீசன்டாக பேசி நடித்தார். அதோடு, இப்போது கவலை வேண்டாம், திருநாள் போன்ற படங்களில் நடிக்கும் ஜீவா, இந்த படங்களின் டைரக்டர்களிடமும் இனிமேற்கொண்டு டீசன்டான நடிகராக விரும்புகிறேன். அதனால் அந்த மச்சி, பச்சி டயலாக்குகளை தவறியும் சேர்த்து விடாதீர்கள் என்று பர்சனலாக கேட்டுக்கொண்டாராம்.