ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் நடித்த சத்யா படத்தில் இயக்குனரானவர் சுரேஷ்கிருஷ்ணா. அதையடுத்து ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, பாபா என முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார். ஆனால் விஜயகாந்த் நடித்த கஜேந்திராவுக்கு பிறகு அவர் இயக்கிய பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் சரிந்தது. அதனால் சின்னத்திரைக்கு சென்று சில தொடர்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரெடி பண்ணி ரஜினியை அணுகினார்.ஆனால் அவரோ, என்னதான் வித்தியாசமான கதை என்றாலும், பாட்ஷாவை மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பது அரிதான விசயம் என்று சொல்லி அந்த முயற்சியை கைவிட சொல்லிவிட்டார். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே ஒரு படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் சுரேஷ்கிருஷ்ணா ஈடுபட்டிருக்கிறார். அதன்காரணமாக, யாராவது தன்னை சினிமா ஆடியோ விழாக்களுககு அழைத்தால்கூட இப்போது என்னால் வரஇயலாது என்று மறுத்து வருகிறார். அதன்காரணமாக, சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ள சதுரன் படத்தின் இசை விழாவுக்கு அழைத்தபோதுகூட தன்னால் இப்போது வரமுடியாது என்று கூறி விட்டாராம் அவர்.
ஆனபோதும், தனது முதல் பட விழாவுக்கு குருநாதர் வராமல் இருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த ராஜீவ் பிரசாத், சுரேஷ்கிருஷ்ணா சொல்லும் தேதியில் சதுரன் ஆடியோ விழாவை நடத்த முடிவு செய்து அவர் சொல்லும் தேதியில் ஆடியோ விழாவை நடத்த காத்துக்கொண்டிருக்கிறார்.