ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'அலைபாயுதே' படம் வந்த பிறகு பல இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கியவர் மாதவன். அடுத்தடுத்து பெரிய அளவில் வலம் வந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழில் “மின்னலே, ரன்” ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் பெயர் சொல்லும்படியாக 'அன்பே சிவம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பின் அவர் தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்விப் படங்கள்தான். கடைசியாக அவர் நாயகனாக நடித்த 'வேட்டை' படமும் தோல்விப் படம்தான்.இப்போது மூன்று வருடங்கள் கழித்து தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் 'இறுதிச்சுற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் 'தனு வெட்ஸ் மனு' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் வெளிவர உள்ளது.“இத்தனை வருட இடைவெளியை நான் வேண்டுமென்றேதான் எடுத்துக் கொண்டேன். என்னை புதுப்பித்துக் கொள்ளவும் எனக்குள் உள்ள திறமையை மீண்டும் வெளிக்கொணரவும் வசதியாக இது இருந்தது. திரையுலகத்தில் நான் சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று என் மனைவியிடம் சொன்ன போது அவரும் அதற்கு சம்மதித்தார். இப்படி ஒரு காதலான மனைவி என் வாழ்க்கையில் அமைந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்,” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மாதவன் தெரிவித்துள்ளார்