ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடவுளின் கிருபையால், வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன், சில பாலிவுட் படங்களுக்கு பிறகு, கப்பார் இஸ் பேக் படத்தின் மூலம், ஸ்ருதி மீண்டும் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்துள்ளார். கப்பார் இஸ் பேக் படம் குறித்தும், இதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
கப்பார் இஸ் பேக் படம் ரிலீசாகியுள்ளது. எவ்வாறு உணர்கிறீர்கள்?
கப்பார் இஸ் பேக் படம் ரிலீசாகியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த படத்தில் நான் நடித்தற்காக இதை கூறவில்லை, ஏனெனில் படம் அப்படிப்பட்ட படம். பாலிவுட்டில், இதற்குமுன் இத்தகைய படங்கள் வந்ததில்லை. நான் உறுதியாக சொல்கிறேன். இந்த படம், பாலிவுட் பாக்ஸ் ஆபிசில் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும்.
ரமணா ரீமேக் தான் கப்பார் இஸ் பேக். எவ்வாறு அதிலிருந்து இதை வேறுபடுத்தியுள்ளீர்கள்?
ஆமாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா படத்தின் ரீமேக் தான் கப்பார் இஸ் பேக் தான். ஆனால், இவ்விரு படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த படத்தில் எனது கேரக்டருக்கும், ரமணா படத்தில் எனது உண்மை கேரக்டருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அக்ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியது குறித்து...
அக்ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அக்ஷய் குமார் சிறந்த மனிதர், சிறந்த நடிகர். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் எதுவெனில், எப்போதும் அவர் எதிர்மறையாக பேசவும், சிந்திக்கவும் மாட்டார். இயல்பாகவும், அதேநேரத்தில், மிக விரைவாகவும் தனது பணிகளை செய்துகொண்டிருப்பார். அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது.
கலை உலகின் வாரிசு என்பதால் எந்த வகையில் லாபம்?
நீங்கள் கேட்பதே தவறு. நான் மட்டுமல்ல, நடிகர்களின் வாரிசுகளுக்கு என்று, திரையுலகில் யாரும் எத்தகைய முன்னுரிமையும் தரப்போவதில்லை. நடிப்புத்திறமை உள்ளவர்கள் அனைவருக்கும் இத்துறையில் சாதிக்க முடியும். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உண்டு. கலை உலகின் வாரிசு என்பதால், முதல் பட வாய்ப்பு வேண்டுமென்றால் விரைவில் கிடைக்கலாம். ஆனால், அந்த படம் தோல்வியடைந்துவிட்டால், அவர்களை சீண்ட ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
உங்களின் அறிமுகம் எவ்வாறு இருந்தது?
திரையுலகில் எனது அறிமுகம், கஷ்டமாகவும் இல்லை, அதேசமயம் எளிதாகவும் இல்லை. கலை உலகின் வாரிசு என்பதால், முதல் பட வாய்ப்பு எனக்கு எளிதாக கிடைத்தது, ஆனால், எனக்கு நடிப்புத்திறமை இருந்ததாலேயே, இத்துறையில் நான் வெற்றி பெற்றேன். எனது தந்தை கமலஹாசன் மற்றும் தாய் சரிகா மூலம் எனக்கு படவாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால், வெற்றி என்பது எனது கடின உழைப்பின் மூலமே கிடைக்கும்.
பாடகியாக அறிமுகமானீர்கள்...பாடகி, நடிகை இது எதில் உங்கள் தேர்வு?
ஆமாம். நான் பாடகியாக தான் அறிமுகமானேன். ஆனால், நான் இப்போது நடிப்பிலேயே முழுகவனத்தை செலுத்தி வருகிறேன். தற்போதைய நிலையில், 2 தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு படம், ஹிந்தியில் பல படங்கள் என ஏழு படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரெடியாக உள்ளன. கடவுளின் கிருபையால், வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை.
பெற்றோரின் நல்ல குணங்கள் எது வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய தாய் துணிச்சல் மிக்கவர், தன்னிச்சையாக செயல்படுபவர். சிறு வயதிலிருந்தே, எனக்காக தன் வாழ்க்கை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவர், அதேபோல, எனது அப்பா, கமலஹாசன் சிறந்த மனிதர். யாருக்காகவும், எந்நேரத்திலும் வளைந்து கொடு்க்காதவர். புதுமைகளை விரும்புபவர். எனது அப்பா போல, புதுமைகளை செய்வதையும், தாய் போல தன்னிச்சையாக இயங்கும் குணத்தை பெற விரும்புகிறேன்.
தமிழ், ஹிந்தி உள்ளி்ட்ட மொழிகளில் நடிக்கிறீர்கள்? இதில் எது உங்களது பேவரைட்?
பாலிவுட்டில், ஒரு சில நடிகர்கள் மட்டுமே எனது பேவரைட் ஆக உள்ளனர். ஆனால் கோலிவுட் நடிகர்கள் அனைவரும் எனது பேவரைட் நடிகர்களே...அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஹீரோக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே பெரிதும் தான் விரும்புவதாக ஸ்ருதிஹாசன் கூறினார்.